4673. | வள்ளியும் மரங்களும் மலையும் மண் உற, தெள்ளு நுண் பொடிபட, கடிது செல்கின்றான்; தள்ளு வன் கால் பொர, தரணியில் தவழ் வெள்ளி அம் பெரு மலை பொருவு மேனியான்; |
வள்ளியும் - கொடிகளும்; மரங்களும் - பலவகையான மரங்களும்; மலையும் - மலைகளும்; மண் உற - மண்ணோடு மண்ணாகும் படி; தெள்ளு நுண் பொடிபட - தெள்ளிய நுண்மையான பொடியாகுமாறு; கடிது செல்கின்றான் - விரைவாகச்சென்றான்; தள்ளு வன்கால் பொர - எல்லாவற்றையும் தாக்கித் தள்ளவல்ல வலிய காற்று மோதுவதால்; தரணியில் தவழ் - பூமியில் தவழ்ந்து வருகின்ற; வெள்ளி அம் பெருமலை - அழகிய வெள்ளிமயமான கைலாய மலையை; பொருவும் மேனியான் - ஒத்த உருவமுடையவனும் (ஆகி). சம்பாதி நடந்து வருகையில் வழியிலுள்ள கொடிகளும் மரங்களும் மலைகளும் பொடியாயினவென அவனது வேகத்தையும் வலிமையையும் கூறினார். தரணியில் தவழ் வெள்ளியம் பெருமலை: இல்பொருளுவமை. சம்பாதிக்கு வெள்ளிமலை உருவின் பெருமையாலும் நிறத்தாலும்உவமையாம். 26 |