4684.'ஒன்றா மூன்று உலகத்துளோரையும்
வென்றான்என்னினும் வீர! நிற்கு நேர்
நின்றானே, அவ் அரக்கன்! நின்னையும்
கொன்றானே! இது என்ன கொள்கையோ?'

     வீர - வீரனே! (இராவணன்); ஒன்றா - (தனக்கு) இணங்கி வராத;
மூன்று உலகத்து உளோரையும் -
சுவர்க்கம், பூமி, பாதாளம் என்னும்
மூவலகங்களில் உள்ளவர் அனைவரையும்; வென்றான் என்னினும் -
வென்றான் என்றாலும்; அவ் அரக்கன் நிற்கு நேர் நின்றானே - (போரில்)
அந்த அரக்கனாகிய இராவணன் உனக்கு எதிராக வந்து நின்றானா?
நின்னையும் கொன்றானே -
உன்னையும் கொன்றானா? இது என்ன
கொள்கையோ -
இது என்ன வியப்பான நிகழ்ச்சியோ?

     மூவுலகத்தையும் வென்ற அந்த இராவணனைவிட நீ மிக்க
வலியவனாதலால் அவன் உன்னை எதிர்த்தான் என்பதும், கொன்றான்
என்பதும் நம்பத்தக்க நிகழ்ச்சிகளாக இல்லையே என்றான் சம்பாதி.

     நின்றானே கொன்றானே: ஏகாரங்கள் வியப்பொடு வந்த வினாக்கள்.
கொள்கை: கோட்பாடு, சூழ்ச்சியும் ஆம்.                           37