சம்பாதி நீர்க்கடன் செய்து வானரரை நோக்கி மொழிதல் 4693. | என்று என்று ஏங்கி, இரங்கி, இன்புனல் சென்று, அங்கு ஆடுதல் செய்து தீர்ந்தபின், வன் திண்தோள் வலி மாறு இலாதவன் துன்றும் தாரவர்க்கு இன்ன சொல்லினான்: * |
என்று என்று ஏங்கி இரங்கி - என்று பலவாறு ஏக்கங் கொண்டு புலம்பி; இன்புனல் சென்று - இனிய நீர்நிலைக்குச் சென்று; அங்கு ஆடுதல் செய்து - அதில் நீராடுதல் செய்து; தீர்ந்த பின் - முடித்த பிறகு; வல் திண்தோள்வலி - மிக்க திண்ணிய தோள் வலிமையில்; மாறு இலாதவன் - ஒப்பற்றவனாகிய சம்பாதி; துன்றும் தாரவர்க்கு - அடர்த்தியான மாலையைத் தரித்த வானர வீரர்களை நோக்கி; இன்ன சொல்லினான் - பின் வருமாறு கூறலானான். சம்பாதி ஒப்பற்ற வலிமையுடையவன் என்பதால் 'தோள்வலி மாறிலாதவன்' என்றார். என்று என்று - அடுக்கு, துன்பத்தின் மிகுதியைக் காட்டுவது. 46 |