4695. | 'எல்லீரும் அவ் இராம நாமமே சொல்லீர்; சொல்ல, எனக்கு ஓர் சோர்வு இலா நல் ஈரப் பயன் நண்ணும்; - நல்ல சொல் வல்லீர்! வாய்மை வளர்க்கும் மாண்பினீர்!' |
நல்ல சொல் வல்லீர் - (மேலும், சம்பாதி அந்த வானர வீரர்களை நோக்கி) இன்சொல் கூறுகின்றவரும்; வாய்மை வளர்க்கும் மாண்பினீர் - சத்தியத்தை வளர்க்கும் பெருமை பெற்றவர்களுமாகிய வானர வீரர்களே! எல்லீரும் - நீங்கள் அனைவரும்; அவ்இராம நாமமே சொல்லீர் - அந்த 'இராம' என்னும் திருநாமத்தையே வாயால் உச்சரிப்பீர்களாக!சொல்ல - (அவ்வாறு என்னருகில்) சொல்வதனால்; எனக்கு - எனக்கு; ஒர் சோர்வு இலா - ஒரு சிறிதும் தாழ்வில்லாத; நல் ஈரப் பயன் - நல்ல (அந்த இராமனின்) அருளாகிய பயன்; நண்ணும் - கைகூடும். 'என்றான்' என்று அடுத்த செய்யுளோடு தொடர்ந்து முடியும். இராம நாமம் ஓதியதால் சம்பாதியின் சிறகு முளைத்தது என்னும் செய்தி. கம்பர் படைப்பு; வான்மீகத்தில் இல்லை. 48 |