சீதையின் இருப்பிடத்தைச் சம்பாதி தெரிவித்தல் 4705. | என்றலும், இராமன் தன்னை ஏத்தினர் இறைஞ்சி, 'எந்தாய்! ''புன் தொழில் அரக்கன் மற்று அத்தேவியைக் கொண்டு போந்தான், தென் திசை'' என்ன உன்னித் தேடி நாம் வருதும்' என்றார்; 'நன்று நீர் வருந்தல் வேண்டா; நான் அது நவில்வென்' என்றான். |
என்றலும் - என்ற சம்பாதி வினாவியவுடனே (அவ் வானரர்); இராமன்தன்னை ஏத்தினர் இறைஞ்சி - இராமபிரானைத் துதித்து வணங்கி (சம்பாதியை நோக்கி); எந்தாய் - எம் தந்தை போன்றவனே!புன்தொழில் அரக்கன் - இழிதொழிலைச் செய்யும் அரக்கனாகிய இராவணன்; அத் தேவியை - அந்த இராமபிரான் தேவியான சீதையை; தென் திசை - தென்திசை வழியாக; கொண்டு போந்தான் என்ன - கொண்டு சென்றான் என்று; உன்னி - நினைத்து; நாம் தேடி வருதும் என்றார் - நாங்கள் அச்சீதையைத் தேடிக் கொண்டு வருகிறோம் என்று கூறினர்; நன்று - (அது கேட்ட சம்பாதி) நல்லது; நீர் வருந்தல் வேண்டா - நீங்கள் வருந்தாதீர்கள்; நான் அது நவில்வென் - நான் இதுபற்றி அறிந்துள்ளதைக் கூறுவேன்; என்றான் - என்று கூறத் தொடங்கினான். பிறர் மனைவியைக் கவரும் தீக்குண முடையவனாதலால் இராவணனைப் 'புன் தொழிலரக்கன்' என்றார். மற்று: அசை. 58 |