4707.'ஓசனை ஒரு நூறு உண்டால், ஒலி
      கடல் இலங்கை; அவ் ஊர்,
பாச வெங்கரத்துக் கூற்றும்
      கட்புலன் பரப்ப அஞ்சும்;
நீசன் அவ் அரக்கன் சீற்றம்
     நெருப்புக்கும் நெருப்பு; நீங்கள்
ஏச அருங் குணத்தீர்! சேறல் எப்
      பரிசு இயைவது?' என்றான்.

     ஒலி கடல் இலங்கை - ஒலிக்கின்ற கடலால் சூழப்பட்ட அந்த
இலங்கையானது; ஓசனை ஒரு நூறு உண்டு - (இங்கிருந்து) நூறு யோசனை
தூரத்திலுள்ளது; அவ்ஊர் - அந்த இலங்கையிடத்து; வெம் பாசக் கரத்துக்
கூற்றும் -
கொடிய பாசக்கயிற்றைக் கையில் கொண்டுள்ள யமனும்; கட்
புலன் பரப்ப அஞ்சும் -
(தனது) கண்ணால் ஏறிட்டுப் பார்க்கவும்
அஞ்சுவான்; நீசன் அவ் அரக்கன் சீற்றம் - இழி செயல் செய்யும் அந்த
இராவணனது கோபமோ; நெருப்புக்கும் நெருப்பு - நெருப்பையும் அழிக்க
வல்ல ஒரு பெருந்தீயைப் போன்றது; ஏசு அறுங் குணத்தீர் - பழிப்பற்ற
நண்பண்புடையவர்களே!நீங்கள் - ; சேறல் - (அங்கே) செல்லுவது; எப்பரிசு
இயைவது -
எவ்வாறு முடியுமோ?என்றான் - என்று (சம்பாதி) கூறினான்.

     ஆல்: ஈற்றசை.

     இலங்கையின் நிலையைப் பார்த்தால் எவ்வாறு அங்கே சென்று
சீதையைக் காண்பது என்று திகைக்கிறான் சம்பாதி.

     பாசம்: கயிற்று வடிவுடைய படைக்கருவி; யமனுக்கு உரியது.       60