399. 

'மாய மானின்பின் தொடர்ந்த நாள், "மாண்டனன்"
                           என்று
வாயினால் எடுத்துஉரைத்தது வாய்மை கொள்
                           இளையோன்
போய், அவன்செயல் கண்டு, உடல் பொன்றினன்
                           ஆகும்;
ஆயது இன்னது என்றுஅறிந்திலேன்' என்று என்றும்
                           அயர்வாள்.

     மாயமானின் பின்போய் இருவரும் இறந்தனரோ என்ற ஐயம் சீதைக்கு
எழுகிறது.                                               (16-1)