'இந்திரன்தரும் மைந்தன் உறும் துயர் யாவும் அந்தரத்தினில்நின்றவர் கண்டு, "இனி, அந்தோ ! எந்தைதன் சரண்அன்றி, ஓர் தஞ்சமும் இன்றால்; வந்து அவன் சரண்வீழ்க !" என உற்றதும் வைப்பாய்.
மைந்தன் - சயந்தன்.எந்தை - இராமபிரான். (77-2)