455.

'மாய்ந்தான், மாருதி கையால், அகிலமும்
     உடையான்மகன்' என வானோர் கண்டு,
ஓய்ந்தார்இலர்,குதி கொண்டார்; உவகையின்
     ஒழியா நறுமலர் சொரிகின்றார்;
சாய்ந்தார்நிருதர்கள் உள்ளார் தமர் உடல்
     இடறித்திரைமிசை விழ ஓடித்
தேய்ந்தார்சிலர்; சிலர் பிடரியில் குதியடி
     பட ஓடினர்;சிலர் செயல் அற்றார்.

     அகிலமும் உடையான் -இராவணன். அவன் மகன் அக்ககுமாரன்.
பிடரியில் குதிபடல் - ஓட்டத்தின் விரைவைக் குறிக்கும் வழக்குச்சொல். (38-1)