4745. | மொய்யுறுசெவிகள் தாவி, முதுகுஉற,முறைகால் தள்ள, மைஅறு விசும்பினூடு நிமிர்ந்தவாலதிய, மஞ்சின் மெய்உறத்தழீஇய, மெல்லென் பிடியொடும்வெருவ லோடும் கையுற மரங்கள்சுற்றி, பிளிறின-களிநல் யானை. |
களிநல் யானை- மதமயக்கமுடைய பெரிய யானைகள்; மைஅறு விசும்பினூடு - மேகம் இல்லாத ஆகாயத்தின்கண்; நிமிர்ந்த வாலதிய - நீண்ட வாலையுடைய (யானைக் கன்றுகள்); மொய்உறு செவிகள் - வலிமை மிக்க காதுகள்; தாவி முதுகுற - பரவி முதுகைச்சார (அதனால்); முறைகால் தள்ள -பருவக் காற்று வீச; மஞ்சின் மெய்யுறத் தழீஇய - மேகத்தைப் போல(த்தம்) உடம்பைத் தழுவிக் கொண்ட; மெல்லென் பிடியொடும் - மென்மையான பெண் யானைகளுடன்; வெருவலோடும் - அச்சத்தோடும்; கைஉற மரங்கள் சுற்றி - கைகளால் மரங்களைச் சுற்றிக் கொண்டு; பிளிறின - வீறிட்டுக் கதறின. யானை, கன்று,பிடியுடன் அச்சத்தோடு மரங்களைப் பற்றிப் பிளிறின. வாலதிய - வாலையுடைய கன்று. வாலதி - வால். அ - உடைமைப் பொருளைக்குறித்தது. வாலதிய என்னும் பலவின்பால் வினைமுற்று வினையாலணையும் பெயராயிற்று. (5) |