இத்திறம் நிகழும் வேலை, இமையவர், முனிவர், மற்றும் முத் திறத்து உலகத்தாரும், முறை முறை விரைவில் மொய்த்தார், தொத்துஉறு மலரும், சாந்தும் சுண்ணமும் இனைய தூவி, 'வித்தக சேறி' என்றார் வீரனும் விரைவது ஆனான்.
இத்திறம்நிகழும் வேலை - இப்படிப்பட்டநிகழ்ச்சிகள் நடைபெறுங் காலத்தில்; இமையவர் முனிவர் மற்றை முத்திறத்து உலகத்தாரும் - தேவர்களும், முனிவர்களும் இன்னும் மூவகையான உலகத்தில் இருப்பவர்களும்; முறை முறை - தகுதிக்கேற்ற வரிசைப்படி; விரைவில் மொய்த்தார் - விரைவாக ஆகாயத்தில் ஒன்று கூடினர்; கொத்து உறுமலரும்- கொத்துக் கொத்தான பூக்களையும்; சாந்தும் - சந்தனத்தையும்; சுண்ணமும்- வாசனைப் பொடிகளையும்; இனைய - இப்படிப்பட்ட பொருள்களையும்;தூவி - (அனுமன் திருமேனியில்) அள்ளி வீசி; வித்தக - அறிஞனே!; சேறிஎன்றார் - 'செல்க!' என்று கூறினார்கள்; வீரனும் விரைவது ஆனான்- அனுமனும்வேகமாகப் போக முற்பட்டான்.
இதுவரை அனுமன்திருவடி அழுத்திய காரணத்தால் மலையின்கண் நிகழ்ந்தவற்றைக் கவிச்சக்கரவர்த்தி விவரித்தார். (13)