4757.

ஆயவன்எழுதலோடும்
     அரும்பணைமரங்கள் யாவும்
வேய்உயர்குன்றும், வென்றி
     வேழமும்,பிறவும், எல்லாம்
'நாயகன் பணிஇது' என்னா,
     நளிர்கடல்இலங்கை தாமும்
பாய்வன என்ன,வானம்
     படர்ந்தன,பழுவம் மான.

     ஆயவன் - அந்த அனுமான்;எழுதலோடும் - மலையை விட்டு
எழுந்தவுடன்; அரும்பணை மரங்கள் தாமும் - சிறந்த கிளையைப் பெற்ற
மரங்களும்; வேய்உயர் குன்றும் - மூங்கில் வளர்ந்த மலைகளும்; வென்றி
வேழமும் -
வெற்றியையுடைய யானைகளும்; பிறவும் எல்லாம் -
கூறப்பெறாத எல்லாப் பொருள்களும்; நாயகன் பணி இது என்னா -
இராமபிரானுக்குச் செய்யும் தொண்டு இது என்று கருதி; நளிர்கடல் இலங்கை
-
குளிர்ந்த கடலால் சூழ்ந்த இலங்கை; தாமும் பாய்வன என்ன - தாங்களும்பாய்ந்து செல்வன என்று கூறும்படி; பழுவம் மான -
சோலைபோல; வானம்படர்ந்த - வானத்திற் பரவிச் சென்றன;

     
ஆயவன் - அத்தகையவன்(ஆய + அன்)                  (17)