விண்ணவர்ஏத்த, வேத முனிவரர்வியந்து வாழ்த்த, மண்ணவர்இறைஞ்ச செல்லும் மாருதி, மறம்உள் கூர, 'அண்ணல்வாள்அரக்கன் தன்னை அமுக்குவென்'இன்னம் என்னாக் கண்ணுதல் ஒழியச்செல்லும் கைலைஅம்கிரியும் ஒத்தான்.
விண்ணவர் ஏத்த- தேவர்கள் போற்றவும்; வேத முனிவர் வியந்து -வேதங்களை அறிந்த சிறந்த முனிவர்கள் வியப்புற்று; வாழ்த்த - வாழ்த்தவும்;மண்ணவர் இறைஞ்ச - மண்ணுலக்கத்தவர் வணங்கவும்; செல்லும் மாருதி - போகும் அனுமான்; உள் மறம் கூர - உள்ளத்தே (இராவணன் மேல்) கோபம்மிகுதியாவதால்; அண்ணல் வாள் - பெருமிதமுடைய கொடிய; அரக்கன்தன்னை - இராவணனை; இன்னும் அமுக்குவென் - மறுபடியும்அழுத்துவேன்; என்னா - என்று கருதி; கண்ணுதல் ஒழிய - சிவபிரான்இல்லாமல்; செல்லும் - தனித்துப் போகின்ற; கைலைஅம் கிரியும் - கயிலாயமலையையும் ; ஒத்தான் - ஒத்திருந்தான். வெண்ணிறமுடையஅனுமன் இராவணன் மேல் கொண்ட சீற்றம்அதிகரிக்க அவனை அமுக்கச் செல்லும் கயிலாயம் போன்றிருந்தான். மறம் -சினம். கைலைஅம்கிரி - அம் சாரியை. (25)