4773. | விளித்துப்பின் வேலை தாவும் வீரன்வால், வேதம் எய்க்கும் அளி, துப்பின் அனுமன் என்னும் அருந்துணைபெற்றதாயும், களித்துப் புன்தொழில்மேல் நின்ற அரக்கர்கண் ணுறுவர் என்ன ஒளித்து, பின்செல்லும் கால பாசத்தைஒத்தது அன்றே. |
விளித்துப் பின்வேலை தாவும்- அறைகூவி பிறகு கடலைத் தாவுகின்ற; வீரன்வால் - வீரனுடைய வாலானது; வேதம் எய்க்கும் - வேதங்களை அறிந்துள்ள; அளி துப்பின் அனுமன் என்னும் - கருணையையும் உற்சாகத்தையும் உடைய அனுமனாகிய; அருந்துணை பெற்றதாயும் - அரிய உதவியை அடைந்ததாய்; களித்துப்புன் தொழில்மேல்நின்ற அரக்கர் - கள்ளுண்டு களித்து, அற்பத் தொழிலை மேற்கொண்டஅரக்கர்கள்; கண்ணுறுவர் என்ன - கண்டு கொள்வார்களோ என்று கருதி;ஒளித்து பின் செல்லும் - மறைந்து அனுமனுக்குப் பின்னே போகின்ற;காலபாசத்தை ஒத்தது - யமனுடைய பாசத்தைப் போன்றிருந்தது. அனுமன் வால்துப்பறியும் அரக்கர்களுக்கு அஞ்சி அனுமனுக்குப் பின்னே மறைந்து போகும் காலபாசத்தை ஒத்தது. துப்பு - அறிவை உணர்த்தி ஆராய்ச்சியை விளக்கிற்று. கள்ளுண்டு ஆராயும் இயல்பு பேசப்பெற்றது. இன் - அல்வழிச் சாரியை. துப்புத் தொழில் என்க. ஆராயும் தொழில். அன்று, ஏ - அசைகள். (33) |