4774. | மேருவை முழுதும் சூழ்ந்து, மீதுற்றவேக நாகம், கார் நிறத்துஅண்ணல் ஏவ, கலுழன் வந்துற்ற காலை சோர்வுறு மனத்ததுஆகி சுற்றியசுற்று நீங்கிப் பேர்வுறுகின்றவாறும் ஒத்தது,அப் பிறங்கு பேழ்வால். |
அப் பிறங்குபேழ்வால் - அந்த விளக்கமானபெரிய வால்; கார்நிறத்து அண்ணல்ஏவ - கரிய நிறத்தையுடைய திருமால் கட்டளையிட; கலுழன் வந்து உற்ற காலை - கருட பகவான் வந்த சமயத்தில்; மேருவை முழுதும் சூழ்ந்து - மேருமலையை முற்றிலும் பற்றிக்கொண்டு; மீதுஉற்ற வேகநாகம் - சிகரத்திலே தங்கிய விடம் பெற்ற ஆதிசேடன்; சோர்வுறு மனத்ததாகி - தளர்ச்சியுற்ற மனத்தை உடையதாய்; சுற்றிய சுற்று நீங்கி - மேருமலையைச் சுற்றியிருந்த கட்டு விலகி; பேர்வுறுகின்ற ஆறும் ஒத்தது - நீங்கிப் போகின்ற தன்மையையும் ஒத்திருந்தது. மேருமலையைப்பிணித்திருந்த ஆதிசேடன் கருடன் வந்ததும் பிணிப்பு நீங்கி விலகிச் செல்வதுபோல் அனுமன் வால் இருந்தது. வேகம் - நஞ்சு - அரவு கான்ற வேகம் ( சிந்தாமணி 1274) விரைவு என்ற கூறினும் அமையும், (34) |