4780. | மீ ஓங்குசெம்பொன் முடிஆயிரம் மின் இமைப்ப, ஓயா அருவித்திரள் உத்தரியத்தை ஒப்ப, தீயோர் உளர்ஆகியகால், அவர் தீமைதீர்ப்பான், மாயோன் மகரக்கடல்நின்றுஎழும் மாண்பதுஆகி. |
மீஓங்குசெம்பொன்முடி ஆயிரம் - வானம் அளாவிய பொன்மயமானஆயிரம் சிகரங்கள் (கிரீடங்கள்); மின் இமைப்ப - ஒளி விளங்கவும்; ஓயாஅருவித் திரள் - வற்றாத அருவிகளின் கூட்டம்; உத்தரியத்தை ஒப்ப -மேலாடையை ஒத்திருக்கவும்; தீயோர் உளர்ஆகியகால் - கொடியவர்கள்தோன்றும் காலத்தில்; அவர் தீமை தீர்ப்பான் - அவர்களால் பெருகும்தீமையை அழிக்கும் பொருட்டு; மாயோன் - (எங்கும் மறைந்துள்ள) திருமால்;மகரக் கடல் நின்று எழும் மாண்பது ஆகி - மீன்கள் உலாவும்கடலிலிருந்து எழுகின்ற சிறப்பை உடையதாய். ஆயிரம்சிகரங்களையும் அருவித் திரள்களையும் பெற்ற மைந்நாகமலை, ஆயிரம் முடிகளையும் உத்தரியத்தையும் உடைய திருமாலை ஒத்தது. தீயோர்களின் தீமையை அழிக்கத் திருமால் அரவணையிலிருந்து எழும் காட்சியைப் பரவசப்பட்டுப் பேசுவார் கம்பர். முடி -மலைச்சிகரம்; இங்கே கிரீடம் என்னும் பொருளைத் தரும். புருஷ சூக்தம்இறைவனின் ஆயிரம் முடியைச் சிறப்பித்துப் பேசும். தாரார் முடியாயிரம் (சடகோபரந்தாதி) 'சஹஸ்ர சீர்ஷ புருஷ' (40) |