மைந்நாகம் அனுமனொடு உரையாடல்

4793.

உந்தாமுன் உலைந்து உயர்வேலை
     ஒளித்தகுன்றம்
சிந்தாகுலம் உற்றது; பின்னரும்
     தீர்வில்அன்பால்
வந்துஓங்கி ஆண்டு ஓர்சிறு
     மானிடவேடம்ஆகி
எந்தாய்இதுகேள்என இன்ன
     இசைத்ததுஅன்றே.

     வேலை ஒளித்தஉயர்குன்றம் - கடலில்இந்திரனுக்குப் பயப்பட்டு
மறைந்திருந்த பெரியமலை; உந்தாமுன் - உந்திக் கொண்டு வருவதற்குள்;
உலைந்து சிந்தா குலம் உற்றது - அச்சமடைந்து மனத்தில் மயக்கம்
அடைந்தது; பின்னரும் - மறுபடியும்;
தீர்வு இல்அன்பால்- ஒதுக்க
முடியாத அன்புடன்; ஆண்டு -அவ்விடத்தில்; ஓர்சிறு மானிடவேடம் ஆகி
- ஒப்பற்ற மனித வேடத்தைமேற்கொண்டு; வந்து ஓங்கி - அனுமனுக்கு
எதிரே
 வந்து நிமிர்ந்து; எந்தாய் - என்னுடைய தந்தையே; இது கேள் என
இன்ன இசைத்தது
- இந்த மொழியைக் கேட்பாயாக என்று பின்வரும்
சொற்களைக் கூறிற்று.

     மைந்நாகமலை,அனுமன் உந்தித்தள்ள அதனால் மனமயக்கம் உற்று,
மனித வடிவத்துடன் வந்து, இதைக்கேள் என்று இம் மொழியைக் கூறிற்று.
உலைதல் - அச்சம் அடைந்து, சிந்தாகுலம் - மனமயக்கம். இன்ன - இந்த,
அன்னோ - அசை, சிந்தாகுலம் உற்று என்னைகொல் வாட்டத் திருத்தியதே
(திருக்கோவையார்)                                       (53)