4794.

வேற்றுப்புலத்தோன் அலென் ஐய,
     விலங்கல்எல்லாம்
மாற்றுச்சிறைஎன்று அரி வச்சிரம்
     மாண ஒச்ச
வீற்றுப்பட நூறியவேலையின்
     வேலையுய்த்து
காற்றுக்கிறைவன் எனைக் காத்தனன்
     அன்புகாந்த.

     ஐய - தலைவனே !;வேற்றுப் புலத்தோன் அலென் - யான்
வேறுபட்ட நாட்டைச் சார்ந்தவன் அன்று; அரி -பகைவர்களை அழிக்கும்
இந்திரன்; விலங்கல் எல்லாம் சிறை - எல்லா மலைகளின் சிறகுகளை; மாற்றுஎன்று - அழிப்பாயாக என்று கூறி; வச்சிரம் மாண ஓச்ச -
வச்சிராயுதத்தைச்சிறப்பு உண்டாக வீசி; வீற்றுப்பட நூறிய வேலையின் -
தனித் தனியாகச்சிதைத்த காலத்தில்; அன்பு காந்த - அன்பு
விளங்கும்படியாக; எனைக்காற்றுக்கிறைவன் - என்னை வாயு பகவான்;
வேலை உய்த்துக் காத்தனன்- கடலிலே தள்ளிக் காப்பாற்றினான்.

     என்னைப் பகைவன்என்று கடியற்க; இந்திரன் மலைகளின் சிறகுகளை
அரிந்த காலத்து உன் தந்தையால் பாதுகாக்கப் பெற்றவன் என்று
மைந்நாகமலை கூறியது. வேற்றுப் புலத்தோன் - பகைவர் நாட்டவன். வேற்றுப்
புலத்திறுத்து (புறம் - 31)                                    (54)