5379. | ' "ஈண்டு நான் இருந்து, இன் உயிர் மாயினும், மீண்டு வந்துபிறந்து, தன் மேனியைத் தீண்டலாவது ஓர்தீவினை தீர் வரம் வேண்டினாள்,தொழுது" என்று விளம்புவாய். |
ஈண்டு - இந்தஇலங்கையில்; நான் இருந்து - (மீட்சி பெறாமல்) நான் துன்பத்துடன் இருந்து; இன் உயர் மாயினும் - இனிய உயிர் இறந்தாலும்; மீண்டு வந்து பிறந்து - மறுபடியும் உலகிற்கு வந்து பி்றந்து; தன் மேனியை - இராமபிரானுடைய திருமேனியை; தீண்டல் ஆவது - தழுவுதலாகிய; ஓர் - ஒப்பற்ற; தீவினை தீர்வரம் - தீமையிலிருந்து நீங்கும் வரத்தை; தொழுது வேண்டினாள் - கைகூப்பி வேண்டிக் கொண்டாள்; என்று விளம்புவாய் - என்று கூறுவாயாக. நின்மேனிஎன்னும் பாடம் இருந்தது போலும். வேண்டினேன் தொழுது என்று அமைக்கலாம் போலும். இராமபிரானின் மேனியைத் தழுவுவது தீவினை தீர்வரம் என்று பிராட்டி கருதினாள். தீவினை என்றது பெருமானைப் பிரிந்திருத்தலை. (35) |