4810. | அக்காலைஅரக்கியும் அண்டம் அனந்தமாகப் புக்கால் நிறையாத புழைப் பெரு வாய் திறந்து விக்காது விழுங்க நின்றாள், அது நோக்கிவீரன் திக்கார்அவள்வாய் சிறிதாம்வகை சேணில்நீண்டான். | அக்காலை - அவ்வாறுஅனுமன் கூறிய போதில்; அரக்கியும் அண்டம் அனந்தமாக - அரக்கியானவளும் அண்டங்கள் எல்லையறப் பெருகி; புக்கால் - புகுந்தாலும்; நிறையாத புழைப்பெருவாய் திறந்து - நிரம்பாத குகைபோன்ற பெரிய வாயைத் திறந்து; விக்காது விழுங்க நின்றாள் - விக்காமல் விழுங்குவதற்குஆயத்தமாக நின்றாள்; அது வீரன் நோக்கி - அவள் செயலை அனுமன் பார்த்து; திக்கு ஆர் அவள் வாய் - திசைகளைப் பொருந்திய அவளுடைய வாயானது; சிறிதாம் வகை - சிறிதாகும்படி; சேணில் நீண்டான் - ஆகாயத்தில் படிப்படியாக வளர்ந்தான். அரக்கியின்வாய் திசைகளின் எல்லையில் இருந்தது. அனுமன் பேருரு வானையளாவி இருந்தது. புழை - குகை. மேருப் புழை என தொக்கு அடங்கித் துயில்தரு கண்ணினான். (யுத்த - கும்ப 68) அரக்கியும் இதில் உள்ள உம் - அசை புக்காலும் என்பதிலுள்ள உம்மை தொக்கு புக்கால் என வந்துள்ளது. (70) |