அங்காரதாரையுடன் அனுமன் பேசுதல் கலிவிருத்தம் 4815. | வெங்கார்நிறப் புணரி வேறேயும் ஒன்றப் பொங்குஆர்கலிப் புனல்தரப்பொலிவதேபோல் 'இங்குஆர்கடத்திர்' எனை என்னா எழுந்தாள் அங்கார தாரைபெரிது ஆலாலம் அன்னாள். |
பெரிது ஆலாலம்அன்னாள் -பெரிய ஆலகால விடத்தைப் போன்ற;அங்கார தாரை - அங்கார தாரை என்பவள்; அப்பொங்கு புனல் ஆர்கலி- அந்த பொங்குகின்ற புனலைப் பெற்றுள்ள கடல்; வேறேயும் ஒன்று -தன்னினும் வேறுபட்ட ஒரு; வெங்கார் நிறப் புணரி - வெப்பமான கரிய நிறம்பெற்ற கடலை; தர - பெற்றெடுத்து; பொலிவதே போல் - விளங்குவதையேஒப்ப (தோன்றி); எனை - என்னை; இங்கு ஆர் கடத்திர் - இங்கேதாண்டிப் போகின்றீர்; என்னா - என்று கூறி; எழுந்தாள் - வளர்ந்தாள். கடல் மற்றொருகடலை ஈன்றதுபோல் அங்கார தாரை கடலில் தோன்றினாள். அவள் என்னை எவர் கடக்கப் போவது என்று கூறினாள். அங்கார தாரை - நெருப்புக் கொழுந்து போன்றவள். ஒன்று புணரியை - எனக்கூட்டி யுரைக்கப் பெற்றது. (75) |