4816.

காதக்கடுங்குறி கணத்து இறுதி கண்ணாள்
     பாதச்சிலம்பின்ஒலி வேலைஒலி பம்ப,
வேதக்கொழுஞ்சுடரை நாடிநெடு மேல்நாள்
     ஓதத்தின்ஓடும்மது கைடவரை ஒத்தாள்.
 

     கணத்து இறுதி -ஒருகணத்தின் முடிவுக்குள்; காதம் - காத
தூரத்திலுள்ள பொருளை; கடுங்குறி கண்ணாள் - வேகமாக அறியும்
கண்களையுடைய அங்கார தாரை; பாதச் சிலம்பின் ஒலி - பாதத்தின்
சிலம்பின் ஒலியாலே; வேலையொலி பம்ப - கடல் அலையின் ஒலி அடங்க;
நெடுமேல் நாள் -
நீண்ட காலத்துக்கு முன்; வேதக் கொழுஞ்சுடரை -
வேதங்கள் உணர்த்தும் ஒளிமயமான திருமாலை; நாடி - போர்செய்ய விரும்பி;
ஓதத்தின் ஓடும் - கடலிலே ஓடி வருகின்ற; மது கைடவரை - மதுவையும்
கைடவனையும்; ஒத்தாள் - ஒத்திருந்தாள்.

     அங்காரதாரை -நீண்ட தூரத்தில் உள்ள பொருள்களைக் காணும்
கண்களைப் பெற்றவள். அவள் திருமாலுடன் போர் செய்ய வந்த மது
கைடவர்களைப் போன்றிருந்தாள். கடும்குறி - வேகமாக அறியும். கலுழன்தன்
கடுமையிற் கரந்தான் (6237) (வேலை - அலை பம்பு - அடங்கி)      (76)