4818.

நின்றாள்நிமிர்ந்து அலைநெடுங் கடலின் நீர்தன்
வன்தான் அலம்பமுடிவான் முகடு வௌவ
அன்றுஆய்திறத்தவன், அறத்தை அருளோடும்
தின்றாள்ஒருத்திஇவள் என்பது தெரிந்தான்.

     நிமிர்ந்துஅலைநெடுங் கடலின் நீர் - பெருகி அலையுடன் கூடிய
கடலின் தண்ணீரானது; தன்வன்தாள் - தன்னுடைய வலிமையான பாதத்தை;
அலம்ப - கழுவ; வான் முகடு முடி வௌவ - ஆகாயத்தின் உச்சியை
தலை அளாவ; நின்றாள் - (அனுமனுக்கு எதிரே) நின்றாள்; ஆய்
திறத்தவன்-
ஆராயும் வலிமைபெற்ற அனுமன்; இவள் - இந்த அரக்கி;
அறத்தை -
தருமத்தை; அருளோடும் தின்றாய் ஒருத்தி - கருணையுடன்
சேர்த்துஉண்டாளாகிய ஒருத்தி; என்பது - என்னும் உண்மையை; அன்று
தெரிந்தான்-
அப்போது தெரிந்து கொண்டான்;

     அரக்கியானவள்பேருருக்கொண்டு நின்றாள். அனுமன் இவள்
அறத்தையும் அருளையும் தின்ற ஒருபெண் என்பதை அறிந்தான்.
அலம்புதல் - கழுவுதல்.ஆழி வடிம்பு அலம்ப நின்றான் என்று நளவெண்பா
பேசும்.                                                (78)