4820. | 'சாயா வரம்தழுவினாய் தழியபின்னும் ஓயாஉயர்ந்தவிசை கண்டுமுணர் கில்லாய் வாயால் அளந்துநெடு வான்வழி அடைத்தாய் நீயாரை? என்னைஇவண்நின்றநிலை' என்றான். |
சாயாவரம்தழுவினாய் - நிழலைப் பிடித்துஇழுக்கும் வரத்தால் என்னை இழுத்தாய்; தழிய பின்னும் - இழுத்த பிறகும்; ஓயா உயர்ந்த விசை- தளர்ச்சி யடையாத வேகத்தை; கண்டும் - பார்த்தும்; உணர்கில்லாய் -(என் வலிமையை) அறியாமலுள்ளாய்; நெடுவான் வழி - பெரிய ஆகாயமார்க்கத்தை; வாயால் - வாயினால்; அளந்து அடைத்தாய்- அளாவித்தடுத்தாய்; நீ யாரை - நீ யார்?; இவண் நின்ற நிலைஎன்னை? - இவ்விடத்தேநிற்கின்ற நிலைமைக்குக்காரணம் யாது; என்றான் - என்று வினவினான். அரக்கியே !நிழலை இழுக்கும் வரத்தால் என்னை இழுத்தாய். யானே அதற்கு அடங்காமல் செல்கிறேன். என் ஆற்றலை உணராமல் உள்ளாய். நீ வான்வழி அடைத்து நிற்கும் காரணம் யாது என்று அனுமன் கேட்டான்.சாயாவரம் - நிழல்மூலமாக ஆட்களை இழுக்கும் வரம். நிலை - தன்மை. நில்லா உலகின்நிலை (கம்ப.3289) (80) |