4820.

'சாயா வரம்தழுவினாய் தழியபின்னும்
ஓயாஉயர்ந்தவிசை கண்டுமுணர் கில்லாய்
வாயால் அளந்துநெடு வான்வழி அடைத்தாய்
நீயாரை
? என்னைஇவண்நின்றநிலை' என்றான்.

    சாயாவரம்தழுவினாய் - நிழலைப் பிடித்துஇழுக்கும் வரத்தால்
என்னை இழுத்தாய்; தழிய பின்னும் - இழுத்த பிறகும்; ஓயா உயர்ந்த விசை- தளர்ச்சி யடையாத வேகத்தை; கண்டும் - பார்த்தும்;
உணர்கில்லாய் -(என் வலிமையை) அறியாமலுள்ளாய்; நெடுவான் வழி -
பெரிய ஆகாயமார்க்கத்தை; வாயால் - வாயினால்; அளந்து அடைத்தாய்-
அளாவித்தடுத்தாய்; நீ யாரை - நீ யார்?;
இவண் நின்ற நிலைஎன்னை?
-
இவ்விடத்தேநிற்கின்ற நிலைமைக்குக்காரணம் யாது; என்றான் - என்று
வினவினான்.

    அரக்கியே !நிழலை இழுக்கும் வரத்தால் என்னை இழுத்தாய். யானே
அதற்கு அடங்காமல் செல்கிறேன். என் ஆற்றலை உணராமல் உள்ளாய். நீ
வான்வழி அடைத்து நிற்கும் காரணம் யாது என்று அனுமன்
கேட்டான்.சாயாவரம் - நிழல்மூலமாக ஆட்களை இழுக்கும் வரம். நிலை -
தன்மை. நில்லா உலகின்நிலை   (கம்ப.3289)                     (80)