4828.

ஊறுகடிதுஊறுவன ஊறில் அறம் உன்னா
தேறல்இல்அரக்கர்புரி தீமை அவைதீர
ஏறும்வகை எங்குளது? 'இராம'என எல்லாம்
மாறும் அதின்மாறுபிறிதுஇல்' என வலித்தான்.

(அனுமன்)

     ஊறு - துன்பங்கள்; கடிது ஊறுவன - வேகமாக அடைகின்றன;
ஊறுஇல் அறம் - அழிவில்லாத தருமத்தை; உன்னா - மதியாத; தேறல்இல்
அரக்கர் -
ஆராய்தல் இல்லாத அரக்கர்கள்; புரிதீமை அவைதீர -
செய்கின்ற அந்ததத் தீமை நீங்க; ஏறும் வகை எங்குளது -
(துன்பங்களிலிருந்து) ஏறுகின்ற வழி எங்கே இருக்கிறது? இராமஎன எல்லாம்
மாறும் -
இராம என்றுகூற எல்லாத் துன்பமும் (இன்பமாக) மாறும்; அதின்
பிறிது மாறு இல் -
அதைவிட வேறான பரிகாரம் இல்லை; என - என்று;
மனத்திடை நினைத்தான் - மனத்திலே உறுதிப் படுத்திக்கொண்டான்.

     அனுமன்,துன்பங்கள் அதிகமாக வருகின்றன. அவை நீங்க
இராமநாமத்தைச் செபிக்க வேண்டும் என்று கருதினான்.            (88)