4834. | உட்புலம்எழுநூறு என்பர் ஓசனை;உலகம் மூன்றில் தெட்புறுபொருள்கள் எல்லாம் இதனுழைச்செறிந்த என்றால் நுட்புலம் நுணங்குகேள்வி நுழைவினர்எனினும் நோக்கும் கட்புலம்வரம்பிற் றாமே ? காட்சியும்கரையிற் றாமே ? |
உள்புலம் -(இலங்கையின்) அகநகர்ப் பகுதி; எழுநூறு ஓசனை என்பர் - எழுநூறு யோசனை என்று கூறுவார்கள்; மூன்று உலகில் - மூன்று உலகங்களிலும் (உள்ள ); தெட்பு உறு பொருள்கள் - சிறப்புடைய பொருள்கள்; எல்லாம் - யாவும்; இதன் உழை செறிந்த என்றால் - இந்தஇலங்கையில் மிகுந்து உள்ளன என்றால்; நுட்புலம் - நுண்மையான அறிவும்;நுணங்கு கேள்வி - நுட்பமான கேள்வியும் (பெற்ற); நுழைவினர் எனினும் -எதனையும் ஊடுருவிப் பார்ப்பவர் என்றாலும்; நோக்கும் - பார்க்கின்ற;கண்புல வரம்பிற்று - கண் அறிவின் எல்லைக்குள்; ஆமே - அடங்குமா;காட்சியும் கரையிற்று ஆமே - காணும் அறிவும் எல்லைக்குள் அடங்குமா. இலங்கையில்மூன்று உலகப் பொருள்களும் அடங்கியிருக்கிறது என்றால் (அவ்விலங்கை) கட்புலனுக்கு அடங்குமா ? அறிவின் எல்லைக்குள் அடங்குமா? (94) |