4834.

உட்புலம்எழுநூறு என்பர்
     ஓசனை;உலகம் மூன்றில்
தெட்புறுபொருள்கள் எல்லாம்
     இதனுழைச்செறிந்த என்றால்
நுட்புலம் நுணங்குகேள்வி
     நுழைவினர்எனினும் நோக்கும்
கட்புலம்வரம்பிற் றாமே ?
     காட்சியும்கரையிற் றாமே ?

     உள்புலம் -(இலங்கையின்) அகநகர்ப் பகுதி; எழுநூறு ஓசனை
என்பர் -
எழுநூறு யோசனை என்று கூறுவார்கள்;  மூன்று உலகில் -
மூன்று உலகங்களிலும் (உள்ள ); தெட்பு உறு பொருள்கள் - சிறப்புடைய
பொருள்கள்; எல்லாம் - யாவும்; இதன் உழை செறிந்த என்றால் -
இந்தஇலங்கையில் மிகுந்து உள்ளன என்றால்; நுட்புலம் - நுண்மையான
அறிவும்;நுணங்கு கேள்வி - நுட்பமான கேள்வியும் (பெற்ற); நுழைவினர்
எனினும் -
எதனையும் ஊடுருவிப் பார்ப்பவர் என்றாலும்; நோக்கும் -
பார்க்கின்ற;கண்புல வரம்பிற்று - கண் அறிவின் எல்லைக்குள்; ஆமே -
அடங்குமா;காட்சியும் கரையிற்று ஆமே - காணும் அறிவும் எல்லைக்குள்
அடங்குமா.

     இலங்கையில்மூன்று உலகப் பொருள்களும் அடங்கியிருக்கிறது என்றால்
(அவ்விலங்கை) கட்புலனுக்கு அடங்குமா ? அறிவின் எல்லைக்குள்
அடங்குமா?                                            (94)