4837. | மாகாரின் மின்கொடி மடக்கினர் அடுக்கி; மீகாரம்எங்கணும் நறுந்துகள் விளக்கி ஆகாய கங்கையினைஅங்கையினின் அள்ளிப் பாகுஆய;செஞ்சொலவர் வீசபடு காரம். |
செஞ்சொலவர் -செவ்வியசொற்களைப் பேசும் மகளிர்; மாகாரின் - பெரிய மேகத்தில் உள்ள; மின்கொடி - மின்னல் கொடிகளை; மடக்கினர் அடுக்கி - மடக்கி ஒன்றன்மேல் ஒன்றாக வைத்து அடுக்கி; மீகாரம் எங்கணும் - உயர்ந்த மாளிகையின் எல்லாப் பகுதியினும்(உள்ள); நறுந்துகள் விளக்கி - நறுமணம் வீசும்மகரந்தக் குப்பைகளைத் துடைத்து (பிறகு); அங்கையினில் ஆகாயகங் கையினை - கைகளால் ஆகாய கங்கைநீரை; அள்ளி - முகந்து எடுத்து;வீசுபடுகாரம் - தெளிக்கின்ற திறமை; பாகுஆய - அழகாக உள்ளது. படுகாரம் - பாகாயஎனக்கூட்டுக. படுகாரம் என்பதற்குப் பெரிய வீடு என்று பொருள்கூறி அது அழகாக உள்ளது என்றும் கூறுவர். மேல்தளங்களில் உள்ள குங்குமத் துகள்களை விளக்கி, ஆகாய கங்கை நீரைக் கையாலே முகந்து தெளிக்கும் சாமர்த்தியம் அழகாயது என்பது பழைய உரை. (3) |