கலிநிலைத்துறை 4838. | பஞ்சிஊட்டிய, பரட்டுஇசைக் கிண்கிணிப் பதுமச் செஞ்செவிச்செழும் பவளத்தின் கொழுஞ்சுடர் சிதறி மஞ்சின் அஞ்சனநிறம் மறைத்து, அரக்கியர் வடித்த அம்சில்ஓதியோடு உவமைய ஆக்குற அமைவ. |
பஞ்சி ஊட்டிய -செம்பஞ்சுக் குழம்பு பூசப்பெற்றதும்; பரட்டு இசை கிண்கிணி - கெண்டைக்காலில் அமைந்த கிண்கிணியோடு கூடியதும் (ஆகிய); பதுமம் - தாமரை போன்ற பாதங்களின்; செஞ்செவி - செம்மையானஅழகிய; செழும் பவளத்தின் - செழிப்பான பவளம் போன்ற விரல்களின்; கொழும்சுடர் சிதறி - ஒளியானது பரவி; மஞ்சின் - மேகத்தின்; அஞ்சனஷ நிறம் மறைத்து - மையை ஒத்த கரிய நிறம்மறையச் செய்து; அரக்கியர் வடித்த - அரக்கியர்கள் ஒழுங்கு செய்த; அம்சில் ஓதியோடு - அழகிய மென்மையான (சிவந்த) கூந்தலுடன்; உவமைய ஆக்குற - ஒப்புமையாகச் செய்ய; அமைவ - பொருந்தியிருப்பன. மகளிரின் கால்விரலின் ஒளிபட்டு கரிய மேகம் அரக்கியரின் சிவந்த கூந்தலின் நிறத்தைப் பெற்றது. பரடு அமை கிண்கிணி - கெண்டைக் காலில் அமைந்த கிண்கிணி; பரடுபுல்லிக் கிண்கிணி சிலம்பொடு ஆர்ப்ப (சிந்தாமணி - இலக்கணை 98) சுடர் - எழுவாய். சில் ஓதி - மென்மையான கூந்தல். மா - விளம் - விளம் - மா எனும் சீர்களை முறையே பெற்றுவரும் இக் கலித்துறை. இத்தகைய பாடல்கள் 1223 இந்நூலில் உள்ளன. (4) |