4846. 

வாழும் மன்னுயிர் யாவையும் ஒருவழி வாழும்
ஊழி நாயகன்திருவயிறு ஒத்துளது, இவ்வூர்;
ஆழி அண்டத்தின்அருக்கன்தன் அலங்கு தேர்ப்புரவி
ஏழும் அல்லன,ஈண்டுஉள குதிரைகள் எல்லாம்.

     இவ்வூர் -இந்தஇலங்கை மாநகர்; வாழும் மன்னுயிர் யாவையும் -
உலகில் வாழ்கின்ற உயிர்கள் எல்லாம்; ஒருவழி வாழும் - ஓரிடத்தில் கூடி
வாழ்கின்ற; ஊழி நாயகன் - ஊழிமுதல்வனான திருமாலின்; திருவயிறு
ஒத்துளது -
திருவயிற்றை ஒத்திருக்கிறது; ஆழி அண்டத்தின் - வட்டமான
அண்டத்திலுள்ள;  அருக்கன்தன் - சூரியனின்; அலங்குதேர் - அசைகின்ற
தேரில் பூட்டப்பெற்ற; புரவி ஏழும் அல்லன - ஏழு குதிரைகளைத் தவிர
(மற்றைய); குதிரைகள் எல்லாம் - எல்லாக் குதிரைகளும்; ஈண்டுஉள -
இங்கே உள்ளன.

     ஆழி -வட்டம்                                      (12)