4853. | வானும் நிலனும் பெறுமாறு, இனி மற்றும் உண்டோ--- கானும்பொழிலும், இவைசெங் கனகத்தினாலும் ஏனைம் மணியாலும்இயற்றிய வேனும், யாவும் தேனும் மலரும்கனியும் தரச்செய்த செய்கை ? * |
கானும் பொழிலும்இவை - காடுகளும் சோலைகளும் ஆகிய இப்பொருள்கள்; செம் கனகத்தினாலும் - செந்நிறமுடைய பொன்னாலும்; ஏனைய மணியாலும் - மற்றமணியாலும்; இயற்றியவேனும் - செய்யப்பெற்றிருந்தாலும்; யாவும் - (செயற்கையாக அங்கே உள்ள) எல்லாமரங்களும்; தேனும் - தேனையும்; மலரும் - மலரையும்; கனியும் - பழங்களையும்; தர - வழங்கும்படி; செய்த செய்கை - அமைத்த வினைத்திட்பத்தை; வானும் - விண்ணுலகமும்; நிலமும் - மண்ணுலகமும்; பெறும் ஆறு - அடையும் வழிகள் (தவத்தைத்தவிர); இனிமற்றும் உண்டோ - இனி வேறும் உள்ளதா. மற்றும் உண்டோஎன்பதில் உள்ள உம்மை, அசை. காமக்கடல் மற்றும் உண்டோ - என்னும் குறளில் பரிமேல் அழகர் 'உம்' அசை என்பார். பெறும் ஆறு மற்றுண்டோ எனச் சேர்க்க. பெறும் வகை உண்டோ என்றும் (வை.மு.கோ). பெறும் வழி வேறு எங்கேனும் உண்டோ (அடை - பதி) என்றும் கூறப்பெறும். (19) |