4861.

இழையும்ஆடையும் மாலையும் சாந்தமும் ஏந்தி,
உழையர்என்னநின்று, உதவுவ நிதியங்கள்; ஒருவர்
விழையும்போகமே, இங்கு இது ?வாய்கொடு
                                 விளம்பின்
குழையும்;நெஞ்சினால் நினையினும் மாசுஎன்று
                                 கொள்ளும்.

(அரக்கர்களுக்கு)

     நிதியங்கள்- நவநிதிகளும்; உழையர்  என்ன நின்று -
பணியாளர்களைப்போல (ஒதுங்கி நின்று); இழையும் ஆடையும் -
ஆபரணங்களையும் ஆடைகளையும்; மாலையும் சாந்தமும் - மாலையையும்
சந்தனத்தையும்; ஏந்தி உதவுவ - கைகளில் தாங்கிக் கொடுப்பன; இங்கு -
இலங்கையில் (இது); ஒருவர் விழையும் போகம் - ஒருவர் அனுபவிக்கும்
போகமாகும்; இது - இந்தப் போகத்தை; வாய்கொடு விளம்பின் - வாயால்
எடுத்துக் கூறினால்; குழையும் - (கேட்பவர்களின் உறுதிப்பாடு)
தளர்ச்சியடையும்; நெஞ்சினால் நினையினும் - மனத்தால் நினைப்பினும்;
மாசு என்று - (என்னுடைய விரதத்துக்கு) குற்றம் என்று; கொள்ளும் -
அனுமன் கருதினான்.

     இது அனுமனின்எண்ண ஓட்டம். என்றனன் இலங்கை நோக்கி (42)
என்னும் பாடலை நோக்கி (42) அறிக. கடல் தாவு படலத்தில் உள்ள
விசும்பிடைச் செல்லும் வீரன் (77) எழுவாய்; என்றனன் பயனிலை.

     மாசு என்றுகுறித்தான் (25) என்னும் பாடம் ஏற்கலாம் போலும். (27)