அறுசீர் விருத்தம்

4868.

எழுந்தனர்திரிந்து வைகும்
     இடத்ததாய், இன்று காறும்
'கிழிந்திலதுஅண்டம்' என்னும்
     இதனையேகிளப்பது அல்லால்
அழிந்துநின்றுஆவது என்னே ?
     அலருளோன் ஆதியாக,
ஒழிந்த வேறுஉயிர்கள் எல்லாம்
     அரக்கருக்குஉறையும் போதா.

     அலர் உளோன்ஆதியாக - பிரம்மன் முதலாக;ஒழிந்த - உலகிலே
தங்கியுள்ள; வேறு உயிர்கள் எல்லாம் - பல்வேறுபட்ட உயிர்கள் யாவும்;
உறையும் போதா - உறையிடவும் போதாதபடியுள்ள;அரக்கருக்கு -
இராக்கதர்களுக்கு; எழுந்தனர் திரிந்து வைகும் - (தாராளமாக) எழுந்து
உலாவித்தங்குதற்கு; இடத்ததாய் - இடத்தைக் கொடுப்பதாய், இருந்தும்;
இன்றுகாறும் -
இன்றுவரை; அண்டம் - இந்தப் (பழைய) உலகமானது;
கிழிந்திலது -
சிதையவில்லை; என்னும் இதனையே - என்கின்ற இந்த
உண்மையையே; கிளப்பது அல்லால் - விதந்து கூறி மகிழ்வதே அன்றி;
அழிந்து நின்று -
மனம் வருந்தி நிற்பதால்; ஆவது என் ? - உண்டாகும்
பயன்தான் யாதோ ?

    அண்டம் -முட்டை, முட்டை மெல்லியது ஆகலின் கிழிந்திலது என்றார்.

    பொருள்களைக்கணக்கிடுவோர் நினைவின் பொருட்டு பத்துக்குப்
பிறகோ நூற்றுக்குப் பிறகோ அடையாளமாக இடும் கல் முதலியவற்றைக்
குறிக்கும் சொல் 'உறை'.                                        (34)