4872. | வள்ளிநுண்மருங்குல் என்ன, வானவர்மகளிர், உள்ளம் தள்ளுற, பாணிதள்ளா நடம்புரிதடங்கண் மாதர், வெள்ளிய முறுவல்தோன்றும், நகையர்,தாம் வெள்கு கின்றார்- கள்இசை அரக்கர்மாதர் களியிடும்குரவை காண்பார். |
வள்ளி நுண்மருங்குல் என்ன - கொடியைஒத்த (தம்முடைய) இடையைப் போல; வானவர் மகளிர் - காணுகின்ற தேவர் மகளிரது; உள்ளம்தள்ளுற - மனமானது (ஊசல்) ஆடும்படி; தள்ளா - விலக்கப்படாத; பாணி -தாள ஒழுங்குக்கேற்ப; நடம்புரி - நாட்டியம் ஆடவல்ல; தடங்கண்மாதர் -நீண்ட கண்களையுடைய தேவமாதர்கள்; கள்இசை - கள்உண்டு பாடுகின்றஇசையுடைய; அரக்கர் மாதர் - அரக்கப் பெண்களின்; களியிடும் குரவைகாண்பார் - (முறையற்ற) குரவைக் கூத்தைப் பார்ப்பதற்கு; வெள்ளியமுறுவல் தோன்றும் - வெண்பற்கள் சிறிதே தெரியும்படி; நகையர் -புன்னகை செய்தவராய்; வெள்குகின்றார் - நாணம் அடைகின்றனர். பாணி ஒழுங்கிற்கேற்ப ஆடவல்ல தேவமகளிர்கள் அரக்கியர்களின் (முறையற்ற) குரவைக் கூத்தைக் காண்பதற்கு நாணம் அடைகின்றனர். பாணி - தாள ஒழுங்கு. தாம் - உரையசை. (38) |