4878. | கரித்தமூன்று எயிலுடைக் கணிச்சி வானவன் எரித்தலைஅந்தணர் இழைத்த யானையை உரித்தபேர்உரிவையால் உலகுக்கு ஓர்உறை புரித்தனனாம்என, பொலியும் பொற்பதே. |
(இருள்) கரித்த -கரியாக்கிய; மூன்று எயில் உடை - மூன்று மதில்களையுடைய; கணிச்சி வானவன் - (மழுவை ஏந்திய) சிவபிரான்; அந்தணர் - (தாருகவனத்தைச் சேர்ந்த) முனிவர்கள்; எரித்தலை இழைத்த - வேள்வியின் கண்ணே படைத்த; யானையை - யானையை; உரித்த - உரித்தெடுத்த; பேர் உரிவையால் - பெரிய தோலினாலே;உலகுக்கு - இந்த உலகத்துக்கு; ஓர் உறை - ஒரே உறையை;புரித்தனன் ஆம் என - அமைத்தான் ஆம் என்று கூறும்படி; பொலியும் -தெளிவான; பொற்பது - ஒப்புமை உடையது. எரித்த -எயிலுடைக் கணிச்சிவானவன் என்னும் தொடர் வடமொழியைப் பின்பற்றி அமைந்தது. அருங்கேடன் என்பது போல் (விளக்கம் - திருக்குறள் - நுண்பொருள் மாலை 46 - பக்). புரிந்தனன் நான்முகன் என்பது நல்ல பாடம் - பிரான் உரித்த தோல் நான்முகனால். பொற்பு - உவம உருபு - பொற்ப போல் (தொல் உவம 297) ஏ - அசை. (44) |