'முனியுமால் எம்மை, எம் கோன்' என்று, அவர் மொழிந்து போந்து, 'கனியும் மாமதுவனத்தைக் கட்டழித்திட்டது, இன்று, நனி தரு கவியின்தானை, நண்ணலார் செய்கை நாண; இனி எம்மால்செயல் இன்று' என்னா, ததிமுகற்கு இயம்பினாரே.
ததிமுகன் - மதுவனக்காவல் தலைவன்; இவன் சுக்கிரீவன் ஏவலால்மதுவனம் காக்கும் வானரன். (11-7)