அனுமன் வாயில்காவலை வியத்தல் 4902. | வெள்ளம் ஒரு நூறொடு இரு நூறும் மிடைவீரர் கள்ளவினைவெவ்வலி அரக்கர், இரு கையும் முள்எயிறும்வாளும்உற, முன்னம்முறை நின்றார் எள்அரியகாவலினை அண்ணலும் எதிர்ந்தான். |
ஒரு நூறொடு இரு நூறுவெள்ளம் - முந்நூறு வெள்ளச்சேனையாக; மிடை - (வாயிலில்) நெருங்கிய; வீரர் - வீரர்களாகிய; கள்ளவினை - பிறர் பொருளைக் கவரும் தொழிலும்; வெவ்வலி அரக்கர் - கொடிய வலிமையும் உடைய அரக்கர்கள்; இரு கையும் - (வாயிலின்) இருபுறத்திலும்; முள்எயிறும் - முள்போன்ற பற்களும்; வாளும் - வாளாயுதமும்; உற - பொருந்த; முன்னம் முறை நின்றார் - முற்படத் (தம்) தகுதிக்கேற்ப நின்று கொண்டுள்ளாரது; எள்அரிய - பிறரால் அவமதிக்க முடியாத; காவலினை - பாதுகாப்பை; அண்ணல் எதிர்ந்தான் - பெருமைமிக்க அனுமன் கண்டான். (68) |