4903.

சூலம்,மழு,வாளொடு,அயில், தோமரம், உலக்கை,
கால வரிவில்,பகழி, கப்பணம், முசுண்டி,
கோல், கணையும்,நேமி, குலிசம், சுரிகை, குந்தம்
பாலம் முதல்ஆயுதம் வலத்தினர் பரித்தார்.

     வலத்தினர் -ஆற்றல்மிக்க அரக்கர்கள்; சூலம் மழு வாளொடு -
சூலம், மழு, வாள்; அயில் தோமரம் உலக்கை - வேல், ஈட்டி, உலக்கை;
கால வரிவில் பகழி -
 யமனைப் போன்ற வில் அம்பு;
கப்பணம் முசுண்டி
-
இரும்புநெரிஞ்சி, முசுண்டி; கோல் கணையம் நேமி - தடி, வளைதடி,
சக்கரம்; குலிசம், சுரிகை, குந்தம் - வச்சிரம், உடைவாள், கைவேல்; பாலம்
-
பிண்டிபாலம்; முதல் ஆயுதம் - முதலான ஆயுதங்களை; பரித்தார் -
தாங்கி நின்றார்கள்.

     ஆற்றல்மிக்கஅரக்கர்கள் சூலம் முதலான ஆயுதங்களை ஏந்தி
நின்றனர். சூலம் - முத்தலைவேல். மழு - கோடாலி. இப்பாடலில் உள்ள
ஒடுவைமூன்றனுருபாக் கொண்டதால் எல்லாவற்றிலும் உம்மையை விரித்து
உரைகூறினர். உம்மை விரித்தால் முதல் என்பது வேண்டா. அடியார்க்கு
நல்லார்,கொடித்தார் வேந்தரொடு எனும் தொடரில் உள்ள (சிலம்பு 5-182)
ஒடுவைஅசையாக்கினும் அமையும் என்றார். ஈண்டும் அது.           (69)