4904. | அங்குசம்,நெடுங்கவண், அடுத்து உடல் விசிக்கும் வெங்குசையபாசம், முதல் வெள்ள பயில் கையர்; செங்குருதிஅன்னசெறி குஞ்சியர், சினத்தோர் பங்குனி மலர்ந்துஒளிர் பலாசவனம் ஒப்பார்.* |
செங்குருதி அன்ன- சிவந்தஇரத்தம் போன்ற; செறி குஞ்சியர் - அடர்ந்த தலைமயிரை உடையவர்களும்; சினத்தோர் - கோபம் உடையவர்களும்; பங்குனி மலர்ந்து - பங்குனி மாதத்திலே பூத்து; ஒளிர் - (இலையின்றி) ஒளி வீசுகின்ற; பலாசவனம் ஒப்பார் - புரசங்காட்டிற்கு ஒப்பானவர்களுமான அரக்கர்கள்; அங்குசம் - மாவெட்டி; நெடுங்கவண் - நீண்ட தூரத்தில் கல் எறியும் கவண்; அடுத்து - பகைவரைச் சார்ந்து; உடல் விசிக்கும் - உடலைப் பிணிக்கும்; வெம்குசைய - வெவ்விய கடிவாளம் போன்ற; பாசம்முதல் - பாசம் முதலான; வெய்ய -கொடிய ஆயுதங்கள்; பயில்கையர் - பழகிய கைகளை உடையவராய் இருந்தனர். பலாச வனம்போல் சிவந்த தலைமயிரை உடைய அரக்கர்கள் அங்குசம் முதலான படைக்கலங்களை ஏந்தியவராய் இருந்தனர். குசை - கடிவாளம்.இதற்குத் தருப்பை என்றும், கச்சு என்றும் பொருள் கூறப் பெற்றது. தருப்பைபோல் அறுக்கவல்ல பாசம் என்று விளக்கம் பேசப்பட்டது. குசைய - கடிவாளம் போன்ற - அ. அசை. ஆளி போல் மொய்ம்பு என்றார் - நச்சர் - அ - அசை என்றார் (சிந்-517) (70) |