4923.

இற்றுச்சூலம் நீறு எழல் காணா, எரி ஒப்பாள்
மற்றும் தெய்வப்பல்படை கொண்டே மலைவாளை
உற்றுக் கையால்ஆயுதம் எல்லாம் ஒழியாமல்
பற்றிக்கொள்ளா விண்ணில் எறிந்தான்,
                              பழிஇல்லான்.*

     சூலம் - அனுமன் மேல் ஏவியசூலப்படை; இற்று - முறிந்து;
(அதனால்) நீறு எழல் காணா - புழுதி கிளம்புவதைப் பார்த்து; எரி ஒப்பாள்-  நெருப்பைப் போன்று சீறி; மற்றும் - பிறகும்; பல்தெய்வப்
படைகொண்டு -
பலவிதமான தெய்வீகப்படைகளைக் கொண்டு;
மலைவாளைஉற்று -
போர் செய்யும் இலங்கைத் தேவியை அணுகி;
பழிஇல்லான் -
பழியற்றவனாகிய அனுமன்; கையால் - தன்னுடைய
கைகளால்; ஆயுதம்எல்லாம் - எல்லா ஆயுதங்களையும்; ஒழியாமல் -
தப்பாமல்;
பற்றிக் கொள்ளா -கவர்ந்துகொண்டு (அவள் மேல் வீசாமல்);
விண்ணில்எறிந்தான் -
ஆகாயத்தில் வீசி எறிந்தான்.

     சூலம் பொடியாகிஅதனால் புழுதி எழுவதைக் கண்டு நெருப்புப் போற்
சினங் கொண்டு இலங்கைத் தேவி வேறு படைகளைக் கொண்டு

போரிட அனுமன் அவள்போர்க்கு வராதபடி ஆயுதங்களைப் பறித்து
விண்ணில் எறிந்தான்.

     நீறு - சூலம்முறித்த அதிர்ச்சியால் உண்டான புழுதி. சூலம் இற்றதே
அன்றிப் பொடியாகவில்லை.

     'பழி ஓர்வான்'என்று பாடம் கொண்டு பெண்ணைக் கொல்வதால்
உண்டாம் பழியை நினைத்துப் படைக்கலங்களை விண்ணில் எறித்து அவளைக்
கொல்லாது விட்டான் எனல் சிறப்புடைத்து.                        (89)