4925.

அடியாமுன்னம் அம்கை அனைத்தும் ஒருகையால்
பிடியா 'என்னே?பெண்இவள்; கொல்லின்
                                பிழை'என்னா,
ஒடியா நெஞ்சத்துஓர்அடி கொண்டான், உயிரோடும்
இடியேறு உண்டமால்வரைபோல், மண்ணிடை
                               வீழ்ந்தாள்.

     அடியாமுன்னம்- அவள் அடிப்பதற்கு முன்னே; அம்கை
அனைத்தும் -
அவளுடைய எட்டுக்கைகளையும்; ஒரு கையால் பிடியா -
ஒரு கையாற் பற்றிக் கொண்டு; இவள் - இந்தப் பகைத்தி; பெண் -
பெண்ணாக உள்ளாள் (ஆதலால்); என் - யான் எப்படிப் போரிடுவேன்;
கொல்லின் -
கொன்றால்; பிழை - பாபமாகும்; என்னா- என்றுகருதி;
ஓடியா-
மனம் இரங்கி; நெஞ்சத்து - அவள் மார்பில் (மற்றொரு கையால்);
இடியேறு உண்ட - பெருத்த இடியால் தாக்கப்பெற்ற; மால்வரைபோல் -
பெருமலைபோல்; உயிரோடும் - உயிருடன்; மண் இடை வீழ்ந்தாள் -
பூமியிலே சாய்ந்தாள்.                                        (91)