4932.

மொய்ம்மணி மாட மூதூர்,
     முழுது இருள் அகற்றா நின்ற,
மெய்ம்மையைஉணர்ந்து, நாணா
     'மிகை' எனவிலங்கிப் போனான்;
இம்மதில்இலங்கை நாப்பண்
     எய்துமேல்,தன்முன் எய்தும்
மின்மினி அல்லனோ, அவ்
    வெயிற்கதிர் வேந்தன்? அம்மா!

     மொய் - நெருங்கிய; மணி - மணிகளால் அமைக்கப் பெற்ற; மாட
மூதூர் -
மாடங்கள் நிரம்பிய இலங்கை நகர்; முழுது இருள் - எல்லா
இருளையும்; அகற்றா நின்ற - நீக்குகின்ற; மெய்ம்மையை - பிரத்தியட்சமானஉண்மையை; உணர்ந்து - அறிந்து; வெயில் கதிர்
வேந்தன் -
வெயிலையும்கிரணத்தையும் உடைய சூரியன்; நாணா - வெட்கம்
அடைந்து; மிகை என -(நாம் இங்கு) அதிகப்படி என்று கருதி; விலங்கிப்
போனான் -
ஒதுங்கிப்போய்விட்டான்; (அவன் நாணம் இல்லாமல்) மதில் -
மதில்களால்சூழப்பெற்ற; இ - இந்த; இலங்கை நாப்பண் - இலங்கைக்கு
நடுவிலே; எய்துமேல் - வருவானேயாயின் (அவன்); தன்முன் எய்தும் - தனக்கு முன்னே(அறிவின்றி) வந்த; மின்மினி
அல்லனோ -
மின்மினிப்பூச்சியாக மாட்டானோ; அம்மா - (இது) அதிசயம்.
(இது வியப்புடைச்சொல்)                                       (98)