4933. | பொசிவுறு பசும்பொன் குன்றில், பொன்மதில் நடுவண், பூத்து, வசைஅற விளங்கும்சோதி, மணியினால்அமைந்த மாடத்து, அசைவுஇல் இவ்இலங்கை மூதூர், ஆர்இருள்இன்மை யாலோ, நிசிசரர்ஆயிற்று அம்மா, நெடுநகர்நிருதர் எல்லாம். |
பொசிவு உறு -ஒளிக் கசிவைப் பெற்றிருக்கின்ற; பசும்பொன் குன்றில்- பசிய பொன்மயமான திரிகூட மலையின்கண்; பொன் மதில் நடுவண் -பொன்னாற் செய்த மதிலுக்கு நடுவில்; பூத்து - மலர்ந்து; வசை அற - குற்றம்எல்லாம் இல்லாது போக; விளங்கும் - பிரகாசிக்கின்ற; சோதி மணியினால் -ஒளிக்கப்பெற்ற மாணிக்கங் களால்; அமைந்த மாடத்து - அமைந்தமாடங்களால்; அசைவு இல் - நடுங்குதல் இல்லாத; இவ் இலங்கை மூதூர் -இலங்கை நகரில்; ஆர் இருள் இன்மையாலோ - மிக்க இருள் இல்லாதகாரணத்தாலோ; நெடுநகர் - பெரு நகரில் (வாழ்கின்ற); நிருதர் எல்லாம் -எல்லா அரக்கர்களும்; நிசிசரர் ஆயிற்று - இரவில் சஞ்சரிப்பவர்கள்ஆயினது. இது தற்குறிப்பேற்றம். பிற - பிறவே. பொசிவுறுதல் - கசிதல். நீர்ப்பொசிவு, கண்டுள்ளோம். இங்கு ஒளிப்பொசிவு பேசப்படுகிறது இதுவே கவிச் சக்கரவர்த்தியின் திருவுள்ளம் பொசிவு - நெகிழ்வு என்பர். ஈண்டு நெகிழ்ச்சி வேண்டின் கொள்க. 98-99 ஆம்பாடல்கள் அனுமனின் கற்பனை ஓட்டம். 98 ஆம் பாடல் சூரியனை மின்மினியாக்கிற்று. 99ஆம் பாடல் அரக்கரை நிசிசரர் ஆக்கிற்று. இது கவிதைச் சித்து. நிருதர்நிசிசரர் ஆயினது இருள் இன்மையாலே என்க. ஆயிற்று என்பது 'ஆயது' என்றும் பொருள்தரும் தொழிற்பெயர் ஆம் - முற்று அன்று. இன்மையாலோ - இதில் உள்ள ஓகாரம் அசையாகவும் கொள்ளலாம் அசையாகக் கொண்டால் இருள் இன்மையால் நிருதர் நிசிசரர் ஆயினர் என்க. (99) |