அனுமன் மறைந்துசெல்லுதல் 4934. | என்றனன்இயம்பி, 'வீதி ஏகுதல்இழுக்கம்' என்னா, தன்தகை யனையமேனி சுருக்கி,மாளிகையில் சார சென்றனன் -என்ப மன்னோ - தேவருக் கமுதம் ஈந்த குன்று எனஅயோத்தி வேந்தன் புகழ்என,குலவு தோளான். |
தேவருக்கு -தேவர்களுக்கு; அமுதம் ஈந்த - அமுதத்தை வழங்கிய; குன்று என - (மந்தர) மலையைப் போலவும்; அயோத்தி வேந்தன் - அயோத்தி அரசனான இராமபிரானின்; புகழ் என - புகழைப் போலவும்; குலவு தோளான் - திரண்ட தோள்களைப் பெற்ற அனுமன்; என்றனன் இயம்பி - என்று (இலங்கையின் அழகைத்) தனக்குள் கூறிக் கொண்டு; வீதி ஏகுதல் - வீதி வழியே போவது; இழுக்கம் என்னா - தவறு நேர்வதற்குக் காரணம் என்று நினைத்து; தன் தகையனையமேனி - தன்னுடைய சிறப்புக்கேற்ற திருமேனியை; சுருக்கி - சுருக்கிக் கொண்டு; மாளிகையில் சார- மாளிகை சார; சென்றனன் - போயினான். 'மாளிகையின்சாரல்' என்று பாடம் கொண்டு மாளிகையாகிய மலைச் சாரலில் எனப் பொருள் உரைப்பர். சாரல் என்றதனால் மாளிகை மலையாயிற்று. மாளிகையை ஒட்டிய பகுதியைச் சாரல் என்பர். என்ப - உரையசை மன், ஓ, இடைச்சொற்கள், அசை நிலையாய்வந்தன. தெருவில் சென்றால் அரக்கரால் வரும் இடையூற்றை 'இழுக்கம்' என்றான். (100) |