4939.

'இலக்கணமரபிற்கு ஏற்ற
     எழுவகைநரம்பின் நல்யாழ்
அலத்தகத்தளி்ர்க்கை நோவ,
     அளந்துஎடுத்து அமைத்த பாடல்
கலக்குறமுழங்கிற்று' என்று
     கன்னியர்சேடி மார்கள்
மலர்க்கையால்,மாடத்து உம்பர்
     மழையின்வாய்பொத்து வாரை-

     இலக்கண மரபிற்குஏற்ற - நூல் முறைக்குப் பொருந்திய; எழுவகை
நரம்பின் -
ஏழுவகையான நரம்பைப் பெற்ற; நல்யாழ் - சிறந்த யாழில்;
அலத்தகம் - செம்பஞ்சு பூசப்பெற்ற; தளிர்க்கை நோவ - தளிர்போன்ற
கைகள் வருந்த; கன்னியர் - அரக்கப் பெண்கள்; அளந்து - தாளத்திற்கேற்ப
அளக்கப்பட்டு; எடுத்து அமைத்த பாடல் - எடுப்பாக அமைத்த பாசுரம்;
கலக்குற - கலக்கம் அமையும்படி; முழங்கிற்று என்று - இடிக்கின்றதென்று;
மழையின்வாய் - மேகத்தின் வாயை; மலர்க்கையால் - (தம்முடைய)
மலர்போன்ற கைகளால்; பொத்துவார் - மூடுகின்ற; சேடிமாரை -
(அரக்கியரின்) தோழியர்களையும்.

    யாழில் உருக்கள்சுரங்களுடன் பாடப்பெறும் சுரங்களுடன் பாடும்பா
பாசுரம் என்க. அளந்து எடுத்து அமைந்த பாடல் - இசைநூல் வல்லார்
ஆராய வேண்டிய பகுதி. இயற்றமிழ் ஒன்றே அறிந்தவர் உண்மை காண
ஒண்ணாதது அலத்தகம் - செம்பஞ்சுக் குழம்பு. 'அலத்தகப் பஞ்சு அடுத்த
பரிபுரப் பல்லவம்' (கம்ப. 2385) என்னும் தொடரை நோக்குங்கால் அலத்தகம்
குழம்பை உணர்த்திடுமோ என்று தோன்றுகிறது. இது அரத்தகம் என்றும்
வழங்கப்படும். பொத்துவார் - முற்று பெயரெச்சப் பொருளில் வந்தது. (105)