4943. | விற்படர்பவளப் பாதத்து அலத்தகம்எழுதி, மேனி பொற்பு அளவு இல்லா வாசப்புனைநறுங் கலவை பூசி, அற்புத வடிக்கண்வாளிக்கு அஞ்சனம்எழுதி, அந்தில் கற்பகம்கொடுப்ப வாங்கி கலன்தெரிந்து அணிகின்றாரை- |
படர்வில் -பரவியஒளியைப் பெற்ற; பவளப் பாதத்து - பவளம் போன்ற பாதங்களில்; அலத்தகம் எழுதி - செம்பஞ்சுக் குழம்பை அலங்கரித்துப் பூசி; அளவு இல்லா - அளவு கடந்த; பொற்பு - பொலிவைப் பெற்ற; வாசம் - மணமுடைய; புனை - கற்பூரம் முதலானவை சேர்க்கப்பெற்ற; நறுங்கலவை - நல்ல கலவைச் சந்தனத்தை; மேனி பூசி - மேனியில் அணிந்து (பிறகு); அற்புத - அதிசயமான; வடி - கூர்மையான; கண் வாளிக்கு - கண்களாகிய அம்புக்கு; அஞ்சனம் எழுதி - மையிட்டு; அம் பொன் - அழகிய பொன்மயமான; கற்பகம் - கற்பக மரம்; கலன்கொடுக்க - ஆபரணங்களை வழங்க (அவற்றுள்); தெரிந்து - தமக்கு ஏற்றவற்றை அறிந்து; வாங்கி - பெற்று; அணிகின்றாரை - அணிபவர்களாகிய அரக்கப் பெண்டிரையும். வாங்கி என்றான்மரத்திற்குக் கீழே தம் கையைத் தாழ்த்தாமல் எடுத்துக் கொண்டமை நோக்கி. (109) |