4944.

புலிஅடு மதுகை மைந்தர்
     புதுப்பிழை உயிரைப் புக்கு,
நலிவிட அமுதவாயால்
     நச்சுஉயிர்த்து, அயிற்கண் நல்லார்,
மெலிவுடைமருங்குல் மின்னின்
     அலமர,சிலம்பு விம்மி
ஒலிபட உதைக்கும்தோறும்
     மயிர்ப்புளகு உறுகின் றாரை-

     புலிஅடும் -புலியைக்கொல்லும்; மதுகை மைந்தர் - வலிமையுடைய
வீரக்கணவர் புரிந்த; புதுப்பிழை - புதிய குற்றமானது; புக்கு - உள்ளத்தே
நுழைந்து; உயிரை நலிவிட - உயிரையே துன்பம் செய்ய; அயில் கண்
நல்லார் -
வேல்போன்ற கண்களையுடைய மகளிர்; அமுத வாயால் -
(முன்பு) அமுதம் வழங்கிய வாயால்; நச்சு உயிர்த்து - (நச்சு) பாம்பைப்
போல மூச்சை வெளிப்படுத்தி; மெலிவு உடை மருங்கில் - மெலிந்துள்ள
இடையானது; மின்னின் அலமர - மின்னலைப் போலத் தடுமாறவும்; சிலம்பு
-
சிலம்பானது; விம்மிஒலிபட - துடித்து ஒலிக்கவும்; உதைக்கும் தோறும் -
உதைக்கும் போதெல்லாம்; மயிர்ப்புளகு உறுகின்றாரை - மயிர் சிலிர்க்கப்
பெறுகின்றவர் களையும்;

     தலைவி உதைப்பதுதலைவனுக்கு இன்பம் தரும். உய்ந்த பிள்ளை
ஊடலைக் காட்டும் குறிப்பாக உதைத்தலை அபிநயித்தார். அப்போது எம்பார்,
'அவனுக்கு அது தேட்டம், என்றார். வைணவ உரைவளம் (30பக்) காண்க.
                                                      (110)