4945. | உள்ளுடைமயக்கால் உண்கண் சிவந்து,வாய்வெண்மை ஊறி, துள்இடைப் புருவம்கோட்டித் துடிப்ப,வேர்பொடிப்ப, தூய வெள்ளிடை மருங்குலார்தம் மதிமுகம்வேறு ஒன்று ஆகிக், கள்ளிடைத்தோன்ற நோக்கிக் கணவரைக்கவல்கின் றாரை- |
தூய - (மேகம் முதலானவைஇல்லாத) சுத்தமான; வெள்ளிடை - வெட்ட வெளி போன்ற; மருங்குலார் - இடையை உடைய மகளிர்; தம் மதிமுகம் - தம்முடைய சந்திரனை ஒத்த முகம்; வேறு ஒன்றாகி - பிறிதொருவடிவமாகி; கள்ளிடை தோன்ற - கள்ளின் சாடியிலே தெரிய; நோக்கி -அதைப் பார்த்து (அதனால்); உள் உடை மயக்கால் - மனம் சிதைந்ததால்உண்டாம் மயக்கத்தால்; உண்கண் சிவந்து - மையுண்ட கண்கள்சிவக்கப்பெற்று; வாய்வெண்மை ஊறி - வாயில் வெண்ணிறம் பரவி; துள் -துள்ளுகின்ற; புருவம் - புருவம்; இடை - நடுவில்; கோட்டி துடிப்ப -வளைந்து துடிக்க; வேர் பொடிப்ப - வியர்வை அரும்பித் தோன்ற; கணவரை - (தன்னைத் தேடும்)கணவரை; கனல்கின்றாரை - சீறுகின்ற மகளிரையும். இப் பாடலைப்பின்பற்றி பரஞ்சோதியார் அமைத்த பாடல் - திருவிளையாடற் புராணம் தருமிக்குப் பொற்கிழியளித்த படலத்தில் (75) காண்க. புலவர் புராணம், பரஞ்சோதி... கம்பன் தனை நம்பிக் கள்ளுண்டாட்டுரைத்தது என்று கூறும். (111) |