அனுமன்கும்பகருணனைக் காணுதல் 4955. | இயக்கியர், அரக்கி மார்கள், நாகியர்,எஞ்சுஇல் விஞ்சை முயல்கறைஇல்லாத் திங்கள் முகத்தியர், முதலி னோரை- மயக்குஅற நாடிஏகும் மாருதி, மலையின் வைகும் கயக்கம்இல்துயிற்சிக் கும்ப கருணனைக் கண்ணின் கண்டான். |
இயக்கியர் -யட்சப்பெண்கள்; அரக்கிமார்கள் - அரக்கப் பெண்கள்;நாகியர் - நாகலோகப் பெண்கள்; எஞ்சு இல் - குறைவற்ற; முயல்கறை- முயலாகிய களங்கம்; இல்லாத் திங்கள் - இல்லாத சந்திரனைப் போன்ற; முகத்தியர் - முகத்தையுடைய; விஞ்சை - வித்தியாதரப்பெண்கள்; முதலினோரை - முதலான பெண்களை; மயக்கு அற - சந்தேகம்இல்லாதபடி; நாடி ஏகும் மாருதி - ஆராய்ந்து செல்லும் ஆஞ்சநேயன்;மலையின் வைகும் - மலைபோல் உள்ளவனும்; கயக்கம் இல் துயிற்சி -இடையீடில்லாத உறக்கத்தை உடையவனும் ஆகிய; கும்பகருணனை -கும்பகர்ணனை; கண்ணின் கண்டான் - கண்களால் பார்த்தான். இயக்கியர்முதலானோரை நாடிச்செல்லும் மாருதி கும்பகர்ணனைப் பார்த்தான். முகத்தியர்,என்னும் குறிப்பு வினைமுற்று பெயரெச்சப்பொருளில் வந்தது. வினை எஞ்சு கிளவியும் வேறு பல்குறிய (தொல்-சொல் 457-சேனா) விஞ்சை என்பது ஆகுபெயராய் விஞ்சையரைக் குறித்தது. 'வித்தைகள் வித்தை ஈசர்' என்னும் சித்தியாரில் வித்தை என்பது மந்திரேசுரரைக் குறித்தமை காண்க (சித்தி. சுபக்கம் 1-25) கயக்கம் - இடையீடு. 104 முதல் 121 வரை ஒரு தொடர். (121) |