4957.

அன்னதன்நடுவண், ஓர் அமளி மீமிசை
பன்னக அரசுஎனப்பரவை தான்என,
துன்இருள்ஓருவழித் தொக்க தாம்என,
உன்னஅருந்தீவினை உருக்கொண் டென்னவே.

     அன்னதன் நடுவண்- அந்தமண்டபத்தின் நடுவில், ஓர் அமளி
மீமிசை -
ஒரு கட்டிலின் மேலே; பன்னக அரசு என - பாம்பரசனான
ஆதிசேடனைப் போலவும்; பரவைதான் என - பாம்பரசனான
ஆதிசேடனைப் போலவும்; பரவைதான் என -  கடலைப் போலவும்; ஒரு
வழி - 
ஒரு பக்கத்தில்; தொக்கது - ஒன்று கூடிய; துன் இருள் என -
மிக்க இருள் போலவும்; உருக் கொள் -  வடிவம் பெற்ற; உன்ன அரும் -
சிந்திக்க அறியாத; தீவினை என்னவும் - பாபத்தைப் போலவும் (உள்ள
கும்பகருணன்).

     தொக்கது இருள் -ஒன்று கூடிய இருள் தொக்கது என்னும் முற்று
பெயரச்சப் பொருளில் வந்தது. (முகவை கவிராயர். நன் 351) இங்ஙனம்
மாற்றாக்கால் அரசு என, பரவை என - யாவும் பெயராக வருதலும் தொக்கது
என முற்று வினையாக வருதலும் சிறப்பின்மை ஓர்க. ஆம் - அசை
'உடற்றவே கொல் ஆம் இப்படை எடுத்தது' என்ற இடத்து ஆம்
அசையாயிற்று (கம்ப. 2308.)                                    (123)