4962. | பகைஎன, மதியினைப் பகுத்து, பாடுஉற அகைஇல்பேழ்வாய் மடுத்து, அருந்துவான்எனப், புகையொடுமுழங்குபேர் உயிர்ப்புப் பொங்கிய நகைஇலா முழுமுகத்துஎயிறு நாறவே. |
பகைஎன - பகை என்று கருதி;மதியினை - பூரண சந்திரனை; பகுத்து - இரண்டு கூறு படுத்தி; அகைஇல் - வருத்தம் இல்லாத; பேழ்வாய் - பெரியவாயின்; பாடு - இரண்டு பக்கத்திலும்; உற மடுத்து - நன்றாக உட்கொண்டு; அருந்துவான் என - உண்பவனைப் போல; புகையொடு - புகையும்; முழங்குபேர் உயிர்ப்பு - முழங்குகின்ற பெருமூச்சு; பொங்கிய - மிக்கிருக்கின்ற; நகை இலா - புன்னகையில்லாத; முழுமுகத்து - பெரியமுகத்திலே; எயிறு நாற - பற்கள் தோன்றவும். சந்திரனை இரண்டுகூறுபடுத்தி உண்பவனைப் போல இரண்டு பக்கங்களிலும் வெண்மையான பற்கள் தோன்றவும். புகையும், உயிர்ப்பும் உள்ள முகம் நாற - வெளிப்பட்டுத்தெரிய அகையில் - வருத்தம் இல்லாத. உணவு இல்லாமையால் வருத்த மடையாத வாய். அகை - வருத்தம். அகையேல் அமர் கோழி (சிந்த 1524) (128) |